கிறிஸ்துவும் கஷ்டமும்!

கிறிஸ்துவை பின்பற்றுவது கஷ்டமாக இருக்கிறது என்று நினைக்கும் கூட்டத்தின் நடுவே, நம்மவர் பலர், கஷ்டங்களை சகிப்பதே கிறிஸ்துவை பின்பற்றுதல் என்பதால், கஷ்டங்களை காட்டிலும் கிறிஸ்து மேலானவராக இருப்பதை உணர்ந்த அவர்கள், கிறிஸ்துவுக்காக கஷ்டங்களை சகிப்பதை கஷ்டமாக கருதுவதில்லை.

 கிறிஸ்துவை பின்பற்றினால் மரணம் வெகு விரைவில் என்ற நிலை இருந்தாலும், கிறிஸ்துவை விரைவில் சந்தித்து துயர் நீங்கி ஆறுதல் அடையும் வாழ்வை விரைவில் சந்திக்க ஏங்குவதால், அவ்வாழ்வை கஷ்டமாக நினைப்பதில்லை. 

இப்படி ஒரு வாழ்வை நாம் வாழ, அப்படி கிறிஸ்து என்ன செய்தார்? என கேட்கும் நண்பர்கள் இதை வாசித்தால், இயேசு உங்களை நேசிக்கிறார் என்பதே பதில்! அவருக்கு நாம் நம்மை அளித்தால், நம்மை அழிக்கும் தீமையை நம்மை விட்டு அழித்து, அழியாத வாழ்வை இலவசமாக தருகிறார்! 

அதற்காக அழிந்து போகும் இந்த மனுகுலத்தின் அவலத்தை, அவர்மீது ஏற்று சிலுவையில் தம் வாழ்வை நம் அவலம் அழிக்க அளித்தார்.

 வா! அவருக்கு உன்னை தா! உன் வாழ்வு அழியா வாழ்வாய் உனக்கு திரும்ப கிடைக்கும்! 

- Joshua Thangaraj G 

Comments

Popular posts from this blog

When Ideologies Fail the Church: A Call to Holy Separation

Reclaiming Education as a Sacred Mission of the Church

Rethinking Humanity: What Jesus Reveals About the Dignity of Women