இறைவனின் சமூகம் வியாபாரிகளின் கூடாரம் அல்ல!
இறைவனின் சமூகம் வியாபாரிகளின் கூடாரம் அல்ல! -Dr.Joshua Thangaraj Gnanasekar (Physiotherapist, Bible Teacher, Author, Good news Herald) யோவான் 2:16 இல் ,இயேசு புறாக்களை விற்றுக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து, “இவைகளை இங்கிருந்து அகற்றிவிடுங்கள். என்னுடைய பிதாவின் வீட்டைச் சந்தையாக மாற்ற எப்படித் துணிந்தீர்கள்!” என்றார்.“ என்று எழுதியிருக்கிறது. எது வியாபாரம்? ஒரு முதலீட்டை செய்து, உழைத்து, அந்த முதலீட்டிலிருந்து லாபம் பெருவதே வியாபாரம். இறைவனின் சமூகத்தில் நமது முதலீடு என்ன? நமது நேரமா? அது அவர் நமக்குத் தந்தது அவரால் அதனை எடுத்துக்கொள்ள முடியும்! நமது பொருட்களா? அவையும் அவர் நமக்குத் தந்தவை. இப்படியிருக்க, அன்று யூதர்கள் இறைவனின் ஆலயத்தில் புறா விற்பது, ஆடுமாடுகளை விற்பது போன்ற வியாபாரங்களை செய்து வந்தனர். இறைவனை ஆராதிக்க வரும் நபர்கள் அங்கு வந்து பேரம் பேசி, பலி செலுத்த மிருகங்களை ஆயத்தம் செய்து அவைகளை வாங்கி அவைகளை இறைவனுக்கு பலி செலுத்தினர்! ஆனால் அவரோ, பலியை விரும்பாதவர்! பலிகளை காட்டிலும் கீழ்ப்படிதலே அவருக்கு ஏற்றது! உங்கள் பலிக...