Posts

Showing posts from August, 2023

2023 சுதந்திர தின உரையில் பிரதமர் பேசியதை குறித்த என் கருத்துக்கள்:

Image
         கடந்த கால வரலாற்றில் நடந்த தவறுகளை சொல்லியே அரசியல் நடத்தும் போக்கு: கையில் கடப்பாறையை வைத்துக்கொண்டு ஒவ்வொரு மசூதியாக இடிப்பதும், ஊருக்குள் மக்களை ஏவி விட்டு ஒருவருக்கொருவர் சண்டை மூட்டி விடுவதையும் தவிர என்ன சாதித்துள்ளது இந்த அரசு?! சாதனையை பட்டியல் போட்டு சொல்வாராம், அடுத்த வருடம் கொடியேற்றும்போது!!                 நாடாளுமன்றமாக இருந்தாலும், நாட்டு மக்கள் முன்பாக இருந்தாலும், மணிப்பூர் மாநிலத்தை பற்றி இவருக்கு ஓரிரண்டு நிமிடங்களுக்கு மேல் பேச முடியவில்லை! நெஞ்சு புடைக்க மிக துணிச்சலாக பேசக்கூடிய இவரால், மணிப்பூரைப்பற்றி பேசும்போது தைரியமாக பேச முடியவில்லை. பேச வேண்டுமே என்பதற்காக பேசினார் என்று அவரது தோரணையில் ( body language) தெரிந்தது.         "தேசம் மணிப்பூரோடு நிற்கும்" என்று சொன்னார். அது உண்மைதான், அரசு நிற்கவில்லை தேசமே நின்றது, நிற்கும். ஏறக்குறைய 300 தேவ ஆலயங்கள் மணிப்பூரில் அழிக்கப்பட்டுள்ளது, 120 பள்ளிக்கூடங்கள் முகாம்க...

இந்த சுதந்திர தினத்தில் நான் ஏன் மூவர்ண கொடியுடன் செல்ஃபி எடுக்கப்போவது இல்லை?

Image
#ilovemycountry #iloveindia #ilove_tricolor_flag #no_to_flag_selfie     இந்திய தேசிய கொடியை ஒரு இந்திய பிரஜையும் ( என்னை உட்பட) மறக்க முடியாது. நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது, மூவர்ண கொடியில் இருக்கும் நிறங்களை பற்றி எங்களது ஆசிரியர் விளக்கம் அளித்தார். காவி நிறம் - சுதந்திர போராட்டத்தின் தியாகத்தையும் பாடுகள் மற்றும் தைரியத்தையும், பலத்தையும் காட்டுகிறது, வெள்ளை நிறம் - சமாதானத்தை குறிக்கும்,  அசோக சக்கரம் - சத்தியம் மற்றும் தர்மத்தை குறிக்கும் ,பச்சை நிறம் - செழிப்பை குறிக்கும் என்று கற்றுக்கொடுத்தார்.         இவை எதையும் நிலைநாட்டி காட்டாத ஒரு அரசு இன்று மூவர்ண கொடியுடன் செல்ஃபி எடுத்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளுங்கள் என்று நமக்கு சொல்கிறது. செல்ஃபி எடுத்து சான்றிதழ் பெற்றுக்கொண்டால் நமது கொடியில் உள்ள அர்த்தம் நம் நாட்டில் நிலைநாட்டப்படுமா? நாட்டில் வெறும் காவி வர்ணம் மட்டும் வரவேண்டும் என்று உழைக்கும் இவர்கள் நமக்கு  தேச பக்தியை கற்றுத்தருகிறது வெட்க கேடாக உள்ளது.               நால்வ...