தீண்டாமைக்கு எதிராக அம்பேத்காரும், காந்தியும், கிறித்தவ மிஷனெரிகளும், உண்மையும்.
தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுக்கும் மாமேதைகள், சாதிய ஒடுக்குமுறைக்கு காரணமாகும் சனாதனத்திற்கெதிராகவோ, நால்வர்ண கோட்பாட்டிற்கு எதிராகவோ குரல் கொடுக்க தயங்குவதின் காரணம், நால்வர்ண கோட்பாடே சனாதனத்தின் ஆன்மாவாக அமைகிறது. சாதி மறுப்பும், சனாதன எதிர்ப்புமே, தீண்டாமையை உண்மையாக ஒழிக்கும். தீண்டாமை ஒரு பாவ செயல் என மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி கூறுவது உண்மையென்றால், தீண்டாமையின் ஆணி வேரான சனாதனத்தின் நால்வர்ண கோட்பாடு தான் அந்த பாவ செயலின் காரணி. இதை சரியாக புரிந்துகொள்பவன், காந்திக்கும், டாக்டர் பீமாராவ் அம்பேத்காருக்குமுள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வான், சனாதனத்தின் இந்த தீய சிந்தனையாம் சாதிய பாகுபாட்டை களையவே, 1700 களிலிருந்து, 1900கள் வரை அனேக கிறித்தவ மிஷ்னெரிகள் வேதங்களையும், சனாதன நூல்களையும், எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் மொழிபெயர்த்தனர். சனாதனத்தின் கள்ளத்தனத்தை மக்கள் புரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காகவே, கல்வியை நால்வர்ண கோட்பாட்டின்படி ஒடுக்கப்பட்டோருக்கு மறுத்து வந்தனர். ஆனால், 1800களில், வில்லியம் கேரி எனும் மிஷனெரி, சமஸ்கிருதத்தை சாதாரன மக்கள் புரிந்துக்கொள்ள செய்தார், ...