புதிய மனிதனுள் இருக்கும் ஆவி!
இயேசுவின் சிலுவை கிரியை மற்றும் உயிர்த்தெழுதலினால், ஒரு புதிய மனுகுலத்தை தேவன் உருவாக்குகிறார்! இந்த புதிய மனிதனை அவர் உருவக்கிய விதம் சற்று ஆச்சரியமானது, ஏனென்றால், ஆதாமின் பாவத்தால் அடிமைகளான மனுகுலத்தை காப்பாற்ற தன் உயிரை தந்து மரித்து அடக்கம்பன்னப்பட்டு உயிர்த்தெழுந்தபின், உயிர்த்தெழுந்த கர்த்தரும், கிறிஸ்துவுமாகிய அவர், தமக்குள் ஒரே புதிய மனுகுலத்தை படைத்தார்! எப்படியென்றால், மரித்த கிறிஸ்துவை தேவன் உயிரோடெழுப்பியது தம்முடைய ஆவியைக்கொண்டு தான், அதேபோல கிறிஸ்துவை மரித்தோரிலிருந்தெழுப்பிய ஆவியைக்கொண்டு அவரை விசுவாசிக்கும் ஒவ்வொருவரையும், அவர்களுடைய மரித்த நிலைமையிலிருந்து உயிரோடெழுப்புகிறார்! ஆனால் இந்த புதிய மனுகுலம் வாழும் வீடு என்னவோ அதே பழைய மாமிச உடலில் தான்! ஆனால், இந்த ஆவியானவருக்கு மரித்தவனையே உயிரோடெழுப்பும் வல்லமையுள்ளதால், பழைய உடலின் மரித்த இச்சைகளை ஜெயிக்கவும் வல்லமையுண்டு என்பதை மறக்க வேண்டாம்! இந்த பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்துவையே மரித்தோரிலிருந்து எழுப்பும்படி தேவனால் அனுப்பப்பட்டவரென்றால், சாவுக்கேதுவான நம் உடல்களை உயிர்ப்பிக்கும் வல்லமை இவருக்கு உண்டு என்பதனைய...