நாட்களை குறை கூறாதே!! காலத்தை மீட்டுக்கொள்!
நாம் வாழும் நாட்கள் பொல்லாதவைகளே! எனவே அதை சொல்லி சொல்லி நாமும் பொல்லாத கிரியைகளை செய்து தப்பித்துக்கொள்ள முடியும் என எண்ண வேண்டாம்! கர்த்தர் நமக்கு கொடுத்த காலத்தை மீட்டுக்கொள்ள வேண்டியது நம் பொறுப்பு. நம்முடைய நற்காலங்களில் நாம் எடுக்கும் சரியான முடிவுகளே, தீய காலங்களில் நம்முடன் துணையாய் நிற்கும்! நாம் தேவனுக்கு பிரியமில்லாத முடிவுகள் சிறிதேனும் எடுத்தால் அது நம்மை தொடரும்! எனவே ஞானமுள்ளவர்களாய் நடந்துகொள்வோம்.
🛑🛑🛑🛑🛑🔴
கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே. அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது. ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார். ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
எபேசியர் 5:10-17 TAOVBSI
https://bible.com/bible/339/eph.5.10-17.TAOVBSI
- Joshua Thangaraj G
Comments
Post a Comment